Sat05192012

Last update01:29:48 PM GMT

Font Size

Profile

Direction

Menu Style

Cpanel

தெருக்கூத்துக் கலைஞர் கோவிந்தவாடி அகரம் து.ஜெயபாலன் நேர்காணல் -யாழினி முனுசாமி

தமிழ்மண்ணின் தொன்மையான கலைகளுள் ஒன்று தெருக்கூத்து. வேறெந்த கலையைவிடவும் மக்களின் வாழ்வோடு இரண்டறக் கலந்துள்ள கலை தெருக்கூத்தாகும். படித்தவர் முதல் பாமரர் வரை சிறியோர் முதல் பெறியோர் வரை அனைவராலும் விரும்பப்படும் இந்தக் கலை ஒரு காலத்தில் தமிழ்மண்ணில் கோலோச்சியது உணமையென்றாலும் இன்றைய சூழலில் அதன் தாக்கம் குறைந்து கொண்டே வருவது போன்று ஒரு தோற்றம் நிலவுகிறது.

 

இந்தச் சூழலில் தெருக்கூத்துக் கலைஞர் து.ஜெயபாலன் ”தடாகம்” இணைய இதழின் வாசகர்களுடன் தன் கூத்து அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கிறார்.

1. எப்பொழுதிலிருந்து நீங்கள் தெருக்கூத்தில் நடித்து வருகின்றீர்கள்? உங்களது தொடக்க கால அனுபவங்களைப் பற்றிக் கூறுங்களேன்?

சுமாராக பதினஞ்சு வயசுல நான் தெருக்கூத்துல நடிக்கத்தொடங்கினேன். முதன்முதல்ல பாண்டவர்களில் அர்ச்ச்சுன்னாக நடித்தேன். அப்பறம் சுந்தரி கல்யாணம் கூத்தில் அபிமன்யுவாக நடித்தேன். அதுக்கப்புறம் தொடர்ந்து குறவஞ்சி, துகில், அரவான் களபலி, சைந்தியன் கர்வபங்கம், அபிமன்யு சண்டை, கர்ணமோட்சம், ஆகிய கூத்துகளில் துரியோதனனாக நடித்தேன். ராஜசுய்யாகம் கூத்தில் முதலில் பீமனாகவும் இப்ப, மரகத மன்னனாகவும் நடித்துக் கொண்டிருக்கிறேன்.

2. உங்களுக்குப் பிடித்த கதாப்பாத்திரம் எது?

அனக்கு விருப்பமான கதாப்பாத்திரம் கர்ணன். அதுக்கு அடுத்ததா அரவான் துரியாதனன்.

3. உங்களுடைய முதல் குரு யார்?
எங்க ஊரான கோவிந்தவாடி அகரத்தைச் சேர்ந்த (காஞ்சிபுரம் மாவட்டம்) இராகவன் ஆசிரியர்தான் என் முதல் குருநாதர். பிறகு சுயமா பல நாடக்க கதாப் பாத்திரங்களை நானே ஆடக் கற்றுக் கொண்டேன்.

4. என்னென்ன கூத்தை அந்தக் காலத்தில் பார்த்திருக்கீங்க?

நெறைய பார்த்தோம் எல்லாத்தயும் சொல்ல முடியாதே!

5. ஞாபகத்துல இருக்கிறத சொல்லுங்க?

மகாபாரதக் கூத்து, இராமாயணக்கூத்து என்று ரெண்டுவிதமா நடக்கும்.

மகாபாரதக் கூத்து நிறைய இருக்கு

- பாண்டு வேட்டை,
- வில் வளைப்பு,
- சுபத்திரை திருக் கல்யாணம்,
- இராஜசுய யாகம்,
- பகடைத் துகில் (ரோபதை வஸ்திர பங்கம்),
- அர்ச்சுனன் தபநிலை,
- கீச்சகன் வதை,
- குறவஞ்சி,
- மின்ன்னோளி சிவ புஜை (அர்ச்சுனனின் 8-வது திருக் கல்யாணம்),
- கிருஷ்ணன் தூது,
- சைந்தியவன் கர்வ பங்கம்,
- அரவான் களபலி,
- இடும்பி பீமன் திருக்கல்யாணம்,
- சுந்தரி-அபிமன்பு திருக்கல்யாணம்,
- அபிமன்பு சண்டை (அபி மன்பு-அர்ச்சுனன்-அல்லி மகன்),
- சின்ன அர்ச்சுனன் சண்டை அல்லது புலியேந்திரன் தூது, மணிமாலன் சண்டை,
- பாதாள அரக்கன் அல்லது போகவதி அர்ச்சுனன் திருமணம், பதினெட்டாம் போர்,
- பாஞ்சாலி சபதம்,
- அளம்புஜா சூரன் அம்புஜவல்லி அர்ச்சுனன் திருமணம்“ தரும் அசுவமேத யாகம் அல்லது ப்பபுருவாகனன் சண்டைட்ட,
- உத்தர காண்டம் வஜ்ர காண்டம்

ஆகியவை மகாபாரதக் கூத்துக்களாகும்.

- வெங்கடேசப் பெருமாள் நாடகம்,
- தக்கன் வேள்வி (பார்வதி-சிவன் கல்யாணம்),
- அரணியன் விலாசம் அல்லது பக்த பிரகலாதா,
- இரண்ய அட்சுத சண்டை (வராக அவதாரம்),
- வாலி மோட்சம்,
- பாவாடை ராயன் பரமகேது,
- சோமுகாசூரன் சண்டை(மச்ச அவதாரச் சண்டை),
- மயில்ராவணன் சண்டை,
- சுந்தரகாண்டம் அல்லது அனுமான் தூது,
- போர் மன்னன் சங்கவதி திருமணம்.

ஆகியவை இராமாயணக் கூத்துக்களாகும்.

இந்தக் கூத்துகளெல்லாம் அக்காலத்தில் நடத்தப்பட்டன.

நான் முதன் முதல்ல பார்த்த கூத்து ”அர்ச்சுனன் தபநிலை” எங்கள் ஊரில் கூத்தைக் கத்துக்கிட்டு ஆடுவாங்க. அதைப் பார்த்துதான் எனக்கும் கூத்துல நடிக்கணும் என்கிற ஆர்வம் ஏறபட்டது.

6. எதுவரை படிச்சிருக்கீங்க?

பள்ளிக்கூடம் பக்கம் கூடப் போனதில்லை. கேள்வி ஞானம்தான். அனுபவம்தான். செல்போன்ல பச்சை பட்டன், செகப்பு பட்டன் தெரியும் மற்றது எதுவும் தெரியாது. இதுல கேமரா, ரேடியோ எல்லாம் இருக்குதான் எதுவும் தெரியாது.

7. தெருக்கூத்துக்கான வரவேற்பு அநதக் காலத்திலயும் இந்தக் காலத்திலயும் எப்படி இருக்கு?

அந்தக் காலத்தில் நல்ல வரவேற்பு இருந்துச்சி. இப்பவும் வரவேற்பு இருக்கு. கொஞ்சம் குறைஞ்சிருக்கு அவ்வளவுதான். ஆனா, எப்பவும் தெருக் கூத்துக்கு மவுசு குறையவே குறையாது. வருசத்துக்கு 200 ராத்திரிக்கு மேல் கூத்து ஆடுறோம். பொதுவா மாசி மாதத்திலிருந்து புரட்டாசி மாதம் வரை தெருக்கூத்து நடக்கும்.

8. தெருக்கூத்து உங்களுக்கு வேலையா, கலையா?

தொடக்கத்துல வருமானத்துக்கான வேலையா இதைப் பார்க்கல. கலையாகத்தான் பார்த்தேன் இன்றைய தேதியில் வெறும் கலையா ஆடமுடியல. வருமானமும் பார்த்துதான் ஆடவேண்டியுள்ளது.

9. வருமானம் எல்லாம் எப்படி இருக்கு?

ஒரு கூத்துல நடிச்சா குறைந்தது ஜந்நூறு ருபாய் கிடைக்கும் ஏதாவது ஒரு கூத்துர் கம்பனியில ஒரு வருசத்துக்கு ஒப்பந்தத்துல இருப்போம். 50 ஆயிரமோ 60 ஆயிரமோ முன்பணம் வாங்கிக்குவோம் அதை கொஞ்சம் கொஞ்சமாக கழிச்சிக்குவாங்க. ஒரு கம்பனி ஒப்பந்தத்துல இருக்கும் போது வேற கம்பனியில் ஆடக்கூடாது. என்ன ஆனாலும் அதே கம்பனியிலதான் இருக்கணும்.

10. ஒரு குழுவுல எத்தனைப் பேரு இருப்பீங்க?

நடிகர்கள் பத்து பேர் ஆர்மோனியம் ஒருவர், மிருதங்கம் ஒருவர், முகவீணை ஒருவர் என மொத்தம் 13 பேர் இரும்போம். நடிகர்களைவிட வாத்தியிக் கலைஞர்களுக்கு 50 ருபாய் கூடுதலாகக் கிடைக்கும் அவ்வளவுதான் வித்தியாசம்.

11. வெளி மாநிலங்களில் எல்லாம் கூத்து ஆடியிருக்கீங்களா?


கல்கத்தாவுக்கும் டெல்லிக்கும் கலைபண்பாட்டுத்துறை முலமாகப் போய் ஆடி இருக்கோம்.

12. மொழிப் பிரச்சினையை எப்படி சமாளிப்பிங்க?

எங்க போய் கூத்து ஆடினாலும் எங்களுடைய பேச்சுமொழியிலதான் பேசி நடிப்போம்.

13. அரசு உங்களுக்கு எந்தளவுக்கு உதவிகரமா இருக்கு?

அரசு எங்களுக்கும் எங்கள் குடும்பத்தினருக்கும் ஓரளவுக்கு உதவிகள் செய்யுது. கூத்துக்கலை அழியாமலிருக்க மேலும் உதவிகள் செய்யப்பட வேண்டும். இயல் இசை நாடக மன்றத்தினர் ஒர சில குழுக்களுக்கே திரும்பத் திரும்ப வாய்ப்புகள் தருகின்றனர். இது தவிர்க்கப்பட வேண்டும். அனைவருக்கும் வாய்ப்புபகள் வழங்கப்பட வேண்டும்.

14. காஞ்சிபுரத்தைச் சுற்றி எத்தனை சுமாரா 15 குமுக்கள் இருக்கு.

திருவள்ளுர், திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களையும் சேர்த்துப் பார்த்தா சுமாரா 50 குழுக்கள் இருக்கும்.

15. எல்லா ஊர்களிலும் ஒரே மாதிரிதான் கூத்து நடக்குமா?

எல்லா ஊர்லயும் ஒரே மாதிரி இடையாது, மேல சொன்ன மாவட்டங்கள்ல ஒரு மாதிரியாக இருக்கம். திணடிவனத்திலிருந்து மாறும். தஞ்சவுர் பக்கமெல்லாம் வெறமாதிரி இருக்கும் தெருக்கூத்துல சினிமா பாட்டு, சினிமா பாட்டு பாடினா ரசிகர்கள் பணம் குத்துவாங்க. அது கூடுதலி வருமானமதானே. ஏதோ கலையைக் காப்பாத்திக்கிட்டு இருக்கோம். சுத்தமா நல்ல முறையில கூத்த நடத்த முடியல. தஞ்சாவுர் பக்கம் எல்லாம் சினிமா கலப்பில்லாம சுத்தமா நடத்து வாங்க.

16. மேடை நாடகத்துக்கும் தெருக்கூத்துக்கும் என்ன வித்தியாசம்?

ஒரு மேடை நாடகம் ஒரு வரும் இரண்டு வருடம் ஓடும். புகழ்பெற்று ஓடும். திடீர்னு காணாமப் போயிடும். ஆனா தெருக்கூத்து அப்படி கிடையாது. என்னைக்கும் அழியாது நாடக்க கதைகளுக்கு மூலம் கிடையாது தெருக்கூத்துக்கு மகாபாரதம், இராமாயணமது மூலம் உண்டு. அதனால் தெருக்கூத்து என்னிக்குமே அழியாது.


17. உங்கள் வீட்டில் வேறு யாறேனும் கூத்து நடிக்கிறாங்களா?

என்னுடைய மகனும் கூத்துக்கலைஞர்தான்.

18. இனறைய தேதியில கிராம்ம-நகரம் எங்கு கூத்துர்கு வரவேற்பு அதிகம் இருக்கு?

நகரம் சார்ந்த இடங்கள்ல கூத்துக்கு நல்ல வரவேற்பு இருக்கு. நகர மக்கள் கூத்த நல்லா விரும்பிப் பார்க்கிறாங்க நல்ல மரியாதையும் கொடுக்கிறாங்க. சென்னையில் கோட்டுர்புரம், குரோம்பேட்டை, தாம் பரம் நுற்றியுள்ள பல இடங்கள்ல ஆடியிருக்கோம்.நல்ல வரவேற்பு கிடைச்சிருக்கு.

19. தெருக்கூத்துக் கலையை இளைய தலை முறையலினருக்குச் சொல்லிக் கொடுக்க தெருக்கூத்துல் பள்ளிகள் இருக்கா?

இருக்கு. பெருங்கட்டூரில் பிறந்து தற்போது காஞ்சிபுரத்தில் வசிக்கும் அராஜ கோபால் என்பவர், காஞ்சிபுரம் பாலாற்றங்கரையில் புஞ்சை அரசந்தாங்கல் எனும் ஊரில் தெருக்கூத்துப் பயிற்சிப் பள்ளி நடத்தி வருகிறார்.

ஒரு யதார்த்தமான சாமான்யமானக் கலைஞனைச் சந்தித்த மனநிறைவுடன் விடை பெற்றோம்


தடாகம்.காம்

Politics

Role of LTTE in Rajeev Gandhi Assasination

Biography

Mamooty's Experiences with Life

Novel

VaMu KoMu's Interesting Novel

History

Che Guevara's Life Explained in Pictures.

Kavithai

Iyappa Madhavan's New Kavithai Collection.
 

Book reviews

வாளோர் ஆடும் அமலை

தமிழ் மன்னர்களின் வீரத்தை தோற்றத்தை நாமும் உருவகப்படுத்த வேண்டியது நமது பெரும் கடமையாகும்.

இப்பணியை வரலாற்று இயலோடு தமிழர் மரபோடு இணைத்து படைக்கின்ற ஆற்றலும் நெஞ்சுரமும் வலிமையும் ஓவியச் செம்மல் மருதுவின் எண்ணத்திலும் எழு உணர்விலும் இயற்க்கையிலேயே அமைந்துள்ளன.

BLOG COMMENTS POWERED BY DISQUS