கூடங்குளம் அணுஉலையை ஏன் ஏற்றுக்கொள்ள முடியாது? - சுவ்ரத் ராஜு, எம்.வி.ரமணா
- Details
- Published on Monday, 14 November 2011 07:30
- Written by Super User
அணு இழப்பீட்டு மசோதாவை ஏற்றுக்கொள்ள மறுத்து, தங்கள் பொருளாதார நலன்களை 1 சதவிகிதம்கூட விட்டுத்தரத் தயாராக அணுஉலை நிறுவனங்கள் இல்லாத நிலையில், உள்ளூர் மக்கள் மட்டும் ஏன் தங்கள் உயிருக்கு ஆபத்தை விளைவிக்க வாய்ப்புள்ள அணுஉலைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும்?
உடைந்த மனத்திலிருந்து - யாழன் ஆதி
- Details
- Published on Monday, 07 November 2011 15:16
- Written by Super User
அந்தச் செய்தி குறுஞ்செய்தியாய் வந்து என் கைப்பேசியில் சேரும்வரர் நான் நன்றாகத்தான் இருந்தேன். வழக்கமாக நான் குறுஞ்செய்திகளை உடனே பார்ப்பதில்லை. அதன்மேல் அவ்வளவு நாட்டமில்லை என்றுதான் சொல்லவேண்டும். ஆனால் சில நேரங்களில் திரையில் குறுஞ்செய்திக்கான அந்த அஞ்சல் உறை சின்னம் நீண்டநாட்கள் இருக்குபோது அதை நான் பார்ப்பேன்.
கூடங்குளம்: அணுமின் நிலையம் - மக்கள் , மக்களுக்கான அரசு - இரா. கிருஷ்ணன்
- Details
- Published on Thursday, 15 September 2011 08:45
- Written by Super User
கூடங்குளம் அணுமின்நிலைய திறப்பிற்கு எதிராக அப்பகுதி மக்களின் போராட்டம் மிகக் கடுமையானதாகவும், நாளுக்குநாள் தீவிரமடையக்கூடியதாகவும் மாறிக்கொண்டிருக்கிறது. அரசாங்கம் எப்படியேனும் அம்மக்களை சமாதானப்படுத்தி, இப்பிரச்சினையிலிருந்து அவர்களை அப்புறப்படுத்திவிட முயற்சித்துக் கொண்டிருக்கிறது. இதற்கு "சாம பேத தாண தண்ட" முறை அனைத்தையும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது.
வாச்சாத்தி தீர்ப்பு - அ.மார்க்ஸ்
- Details
- Published on Sunday, 02 October 2011 15:08
- Written by Super User
வன மற்றும் காவல்த்துறைகளைச் சேர்ந்த 215 பேர்களுக்குத் தண்டனை வழங்கி அளிக்கப்பட்டுள்ள தீர்ப்பு பெரிய அளவு வரவேற்பைப் பெற்றுள்ளது. குற்றம் நடைபெற்று 19 ஆண்டுகளுக்குப் பின் வழங்கப் பட்டுள்ள இத்தீர்ப்பு இத்தனை தாமதமாக வந்துள்ளது குறித்த விமர்சனங்கள் இணையாக வைக்கப்பட்ட போதும், கால தாமதமானாலும் பழங்குடி மக்களுக்கு உரிய நீதி கிடைத்துள்ளதே என்பது எல்லோருக்கும் மகிழ்ச்சி அளித்துள்ளது.
காதலில் தோல்வியுற்ற செங்கொடிகள் தீகுளிகின்றனர் - தினமலர் செய்தி
- Details
- Published on Monday, 05 September 2011 08:55
- Written by Super User

மூவர் உயிரைக் காக்க வேண்டும் என்று கடிதம் எழுதி வைத்துக் கொண்டு தீக்குளித்து இறந்தார் தோழர் செங்கொடி. ஆனால் அந்த செங்கொடி காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டார் என்று இன்று தினமலர் நாளேடு வெளியிட்டிருக்கிறது.

இச்செய்திகள் தமிழகம் முழுக்க பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது . இதைக் கண்டித்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று மதியம் தினமலர் நாளிதழை எரித்து, செருப்பால் அடிக்கும் போராட்டம் நடைபெற இருக்கிறது. தமிழர் அமைப்புகள் பாண்டிச்சேரி , மதுரை தினமலர் அலுவலகத்தை முற்றுகையிட்டு அடித்து நொறுக்கினர். இதுவரை 50 தோழர்கள் கைது செய்ய பட்டுள்ளனர் .
தினமலர் கட்டுரையில் பயன்படுத்திய வார்த்தைகள் சில :
** இனப்படுகொலைக்கு எதிரான போராட்ட சீசன் முடிந்த களைப்பில் **
** காதலில் தோல்வியுற்ற செங்கொடிகள் தீக்குளிக்கின்றனர் **
பரமக்குடி துப்பாக்கி - யாழன் ஆதி
- Details
- Published on Saturday, 01 October 2011 08:23
- Written by Super User
அந்த கிராமத்தில் நாங்கள் நுழைந்த போது பெண்கள் கோபமாக எங்களைச் சூழ்ந்துகொண்டார்கள். மதுரையிலிருந்து பரமக்குடிக்குப் போகும் சாலையில் பரமக்குடியின் வெகு அருகில் இருக்கும் சேரிப்பகுதி அது. எச். பரளை என்று அதற்குப் பெயர்.’
புவனேஸ்வரியும்... திடீர் ரோஷக்காரர்களான தமிழ் சினிமா நட்சத்திரங்களும்... - வடிவேல்.
- Details
- Published on Thursday, 18 August 2011 17:22
- Written by Super User

1. "உங்க வீட்டு பொண்ணுங்களோட படங்களைக் கொடுங்கள். பிரா ஜட்டியோடு நான் வெளியிடுகிறேன்" நடிகர் விவேக்.
2. "உங்க வீட்டுப் பொண்ணுங்க ஓடிப் போவாங்கல்ல அப்போ பாக்குறோம்டா" டைரக்டர் சேரன்.
பரமக்குடியில் ஏற்பட்ட துப்பாக்கிச்சூட்டிற்கு காவல்துறையின் அத்துமீறலே காரணம்
- Details
- Published on Thursday, 15 September 2011 18:57
- Written by Super User
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சட்டமன்றக்குழு ஆய்வு : அ.சவுந்தரராசன் பேட்டி
பரமக்குடி.செப்.15-
பரமக்குடியில் ஏற்பட்ட துப்பாக்கிச்சூட்டிற்கு காவல் துறையின் அத்துமீறலும், உளவுத்துறையின் பொறுப் பற்ற தன்மையுமே காரணம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்றக்குழுத் தலைவர் அ.சவுந்தரராசன் கூறி னார்.






