Sat05192012

Last update01:29:48 PM GMT

Font Size

Profile

Direction

Menu Style

Cpanel

அமுத தமிழில் பெயர் சூட்டுவோம்

உலகின் இரண்டாயிரம் ஆண்டு கால வரலாற்றில் மாறிப் போனவை பலப்பல. மாறாதிருப்பவை ஒரு சிலவே . அவற்றுள் முன்னைப் பழமைக்குப் பழமையாய் பின்னைப் புதுமைக்குப் புதுமையாய் இருப்பது நம் தாய்த்தமிழும் ஒன்றாகும். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கிரேக்கமும் தமிழகமும் ஒத்த வளம் உடையதாய் இருந்தன. கடற்கலம் கொண்டு தமிழன் வணிகம் புரிந்தமை இதற்குச் சான்று கூறும்.

வாழ்வியல் தத்துவத்தால் வளத்தால், கல்வியால் அறிவியலால், வேளாண்மையால் பெரும் உச்சத்தில் இருந்த தமிழர் இன்று எல்லாவற்றையும் மெல்ல இழக்கும் கொள்கையர் ஆயினர் முன்னோர் தந்ததை வளர்க்க வழிகாணாவிடினும் அதனை அழிக்கத் தலைப்பட்டு இருப்பது வரலாற்றுப் பிழையாகும்.

தமிழ்க் குடும்பங்கள் இன்று தாம் யார் என அறிதலையும் உலக மாந்தரில் தமக்குள்ள  பண்டைய இடம் குறித்தும் இன்றைய இடம் குறித்தும்  சிந்தித்தலையும் செய்யக் கூடாத செயலாகக் காணுகின்றன. ஆகவேதான் தங்களின் குழந்தைகளுக்கு அடையாளங்களை அறியாது இழந்துவரும் நிலை தொடர்கிறது.

அவற்றில் ஒன்றுதான் தங்கள் குழந்தைகளுக்குத் தமிழில் பெயர்ச் சூட்டாமல் பிறமொழிக் கலப்பில் பெயர்ச் சூட்டி மகிழும் போக்கு இது மேம்போக்காய் நோக்கினும், தன் தாய்மொழியில் குழந்தைகளுக்குப்  பெயர்ச் சூட்டி  கொள்ளாத மக்களின் அறிவுடைமை, அவ்வினத்தின் பண்பாடு, மொழியின் சிறப்பு அனைத்தையும் கேள்விக் குள்ளாக்கின்றன அல்லவா?

‘’ ஓர் இனத்தை அழிக்க வேண்டுமானால் முதலில் அவ்வினத்தின் மொழியை அழித்து விடுங்கள் இனம் தானாக அழிந்துவிடும்’’ என்றான் இங்கர்சால்.

ஓர் இனம் எதை இழந்தாலும் மீட்டுக்கொள்ள இயலும். ஆனால் தாய்மொழியை இழப்பது என்பது இந்த உலகில் வாழ்வதற்கான வாழ்வுரிமையை இழப்பதற்கு ஒப்பாகும். பின்னர் அகதி வாழ்வே நிலையாகும். பிறரை அண்டிப்பிழைக்கும்  வாழ்வு தலைமுறை தலைமுறையாய்த் தொடரும் தாய்மொழியின் கூறுகள் பல்வகையால் ஓர் இனத்தின் வாழ்வியல் நிலைகள் அனைத்திலும் பரவிக்கிடக்கின்றன. தாய்மொழி அம்மொழி பேசும் மக்களின் வாழ்விட, வாழ்நில ஆவணமும் ஆகும். தாய்மொழியின் கூறுகளை அடிப்படைகளை தாய்மொழியின் கூறுகளை அடிப்படைகளை இழக்கும் இனம் நாடோடியாய் மாறும்; ஒவ்வொரு அடையாளங்களாய் இழந்து இறுதியில் தங்களுக்கான நிலமின்றி பிறநாட்டாரை ஒண்டி அண்டி பிழைக்கும் அவலநிலைக்கே ஆளாகும்.

ஆகவேதான் உயர்நிலை கண்ட நாட்டினர் அனைவரும் தம் அனைத்து அடையாளங்களையும் தத்தமது தாய்மொழியைக் கொண்டே அமைத்து கொள்கின்றனர். அது கல்வியாயினும், நீதியாயினும், அரசாட்சியாயினும், பண்பாடு ஆயினும், பெயராயினும், தங்கள் மொழிக்கும் நிலத்திற்கும் வலுச்சேர்க்கும் வகையிலேயே அமைக்கின்றனர்.

அவ்வகையினாலேயே தமிழர்களாகிய நாமும் நம் முன்னோடிகள் நம்மிடம் தந்துப்போன மொழியையும், நிலத்தையும், பண்பாட்டையும், காத்திட நம் தாய்மொழியாம் தமிழில் நம் குழந்தைகளுக்குப் பெயர்ச் சூட்டி மகிழ்வோம்.

 

குழந்தைகளுக்கான அழகிய தமிழ் பெயர்கள் :

 





அன்பரசி 
அங்கயற்கன்னி
அங்கயற்கரசி
அன்னக்கீளி
அறிவழகி
அருள்மொழி
அண்ணாதுரை
அருள்
அருள்மணி
அமுதவன்
அறிவழகன்
அறிவு
அழகுச்சொழன்
அகத்தியன்
அருண்மொழி
அகரன்
அம்முவன்
அமிழ்தன்
அரசு
அருளன்
அருணன்
அவனியன்
அறிவன்
அன்பன்
அமுதன்
அணுவன்
அணுவி
அணுவிழி
அணுவை
அறிவரசு
அறிவன்
அன்பன்
அன்பொழில்
அறிவுக்கனி
அறிவோசை
அன்புத்தமிழ்
அரும்பு
அகழ்விழி
அணிமாலை
அதியன்
அமிழ்தினி
அமுதினி
அரவரசன்







ஆதித்யன்
ஆதவன்
ஆதித்தமிழன்
ஆதிரை
ஆடாலன்
ஆற்றலரசு
ஆடலரசு
ஆதன்







இளவரசன்
இனியாழ்
இன்ச்சொல்
இரும்பொறை
இளங்கோ
இனியன்
இன்பன்
இறையன்பு
இறைவன்
இசைக்கோ
இசைமனி
இசைவன்
இமையன்
இசையள்
இசையன்
இனியள்
இனியன்
இசையமுதன்
இசை
இசைமொழி
இசையமுது
இன்பரசு
இனியரசு
இளவன்
இளவள்
இசைவடிவு
இசைப்பண்
இசைப்பொழில்
இசைதமிழ்
இளங்கதிர்







ஈகன்
ஈகவரசு
ஈகையரசு
ஈழமுது
ஈழமுகில்







கலைமயள்
கலையரசி
கலைக்கொடி
கயல்விழி
கண்மணி
கனிமொழி
கபிலன்
கதிர்
கலையரசன்
கலையரசு
கனியரசு
கனிமகள்
கதிர்மகள்
கதிர்மொழி
கனிமொழி
கதிரண்
கதிரணு
கண்மொழி
கலைகோ
கலைமதி
கலைமலர்
கலைப்பூ
காந்தள்
கார்முகில்
கலைமொழி
கலைக்கோ
கலையரும்பு
கவின்
கவின்மொழி
கன்னல்
கனியன்






கா


கார்முகிலன்






கு


குற்றாளன்
குழலி




மா


மாசிலா
மாதவி








மலர்விழீ
மல்லி
மணிக்கொடி
மணிபொழி
மதியழகன்
மலரவன்
மணிமாறன்





மு


முகிலன்










ஒப்பில்லாமணி






பி




பிறைசூடன்






யா



யாழ்ச்செல்வன்
யாழ்மணி
யாழினி




வி



விண்ணவன்
வினையரசு
வின்மணி 




பொ


பொண்ணி

பொன்மணி




பூ



பூங்குழலி





சொ


சொல்வளவன்





தா


தாமரைக்கண்ணன்
தாமரைமணாளன்






செ



செந்துரன்
செந்தமிழரசன்
செல்வநிலா






தமிழரசி
தமிழ்ச்செல்வி
தமிழன்பன்
தமிழ்ழகன்
தமிழ் மணி
தமிழ்கோ
தாமரை
தவமலர்
தமிழ்மதி
தமிழமிழ்தன்
தமிழினி
தமிழமுதன்
தழலன்
தமிழ்யாழ்





தே



தேன்மொழி
தென்றல்





சு



சுடரோள்
சுடரவன்
சுடரொளி
சுடர்மதி








உதய மனி





சீ



சீராளன்
சீர்மையன்






வை



வையை








வளர்மதி




வா



வான்மதி




வெ


வெண்மதி
வெண்நிலா









எழில்
எழிலாள்
எழிலன்
எழிற்கோ
எழில்மொழி
எழிற்பா
எழில்மதி
எழில்நிலா
எழிற்கதிர்
எழிலன்பன்





பா



பாவலன்
பாவரசு
பண்மொழி
பாமலர்

Politics

Role of LTTE in Rajeev Gandhi Assasination

Biography

Mamooty's Experiences with Life

Novel

VaMu KoMu's Interesting Novel

History

Che Guevara's Life Explained in Pictures.

Kavithai

Iyappa Madhavan's New Kavithai Collection.
 

Book reviews

வாளோர் ஆடும் அமலை

தமிழ் மன்னர்களின் வீரத்தை தோற்றத்தை நாமும் உருவகப்படுத்த வேண்டியது நமது பெரும் கடமையாகும்.

இப்பணியை வரலாற்று இயலோடு தமிழர் மரபோடு இணைத்து படைக்கின்ற ஆற்றலும் நெஞ்சுரமும் வலிமையும் ஓவியச் செம்மல் மருதுவின் எண்ணத்திலும் எழு உணர்விலும் இயற்க்கையிலேயே அமைந்துள்ளன.

BLOG COMMENTS POWERED BY DISQUS