ராம்ராவ்:வாழ்வெனும் மரணம்

0 out of 5

350.00

தற்கொலை முயற்சியில் தப்பிப் பிழைத்த ஒரு பருத்தி விவசாயி ராம்ராவ். மகாராஷ்டிராவில் உள்ள யவத்மால் மாவட்டத்தின் உள்ளடங்கிய கிராமமான ஹிவாராவில் வாழ்கிறார். அவர் எதற்காகத் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்? அதன் பின்னரான அவரது வாழ்வு எப்படி இருந்தது? ஒரு விவசாயியின் அன்றாட வாழ்வு எத்தகையது? என்ற அடிப்படை கேள்விகள் ஊடாக விதர்பாவில் என்ன நடக்கிறது? உண்மையில் பருத்தி விவசாயத்தில் என்ன சிக்கல்? ஒட்டுமொத்தமாக விவசாயத்தில் என்ன சிக்கல்தான் உள்ளது? என்ற கேள்விகளுக்கான விடையைத் தேடி ஆசிரியர் மேற்கொள்ளும் பயணமே இந்நூல்.

Description

ஆதிகாலம் தொடங்கி கருவிகள், உடை என மனித இனம் தொடர்ந்து உற்பத்தியில் ஈடுபட்டு வந்துள்ளது. அவற்றில், மனித வாழ்வின் உயிராதார உற்பத்தியாக இருப்பது உழவு மட்டுமே. இந்தப் புரிதலை கால மாற்றத்தின் போக்கில் மனிதன் எங்கோ தவறவிட்டுவிட்டதன் விளைவே இன்று உலகெங்கும் உழவுத் தொழில் சந்தித்து நிற்கும் பெருஞ்சிக்கலின் ஆணிவேர்.

உலகெங்கிலும் நிலவும் இந்த உழவுச் சிக்கலில் இந்திய விவசாயத்தின் நிலையோ மிக மோசமாக உள்ளது. கடந்த 30 ஆண்டுகளாக இந்தியாவில் உலகமயமாக்கல், தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கலின் விளைவாக உழவுத் தொழில் சந்தித்து நிற்கும் பெருஞ்சிக்கலை மிக நெருக்கமான கோணத்தில் இந்நூல் நம் முன் வைக்கிறது.

படித்த இளைஞர்கள் உழவுத் தொழிலை மேற்கொள்வது மட்டுமே தீர்வாகிவிடாது என்பதையும், உழவுத் தொழிலைச் சுற்றியுள்ள பல நுட்பமான சிக்கல்கள் அனைத்தையும் இந்நூல் மிக விரிவாகவே அலசுகிறது.

Additional information

Author

ஜெய்தீப் ஹர்திகர்

Translator

பூங்குழலி

Publication Year

2022

Publisher

தடாகம் வெளியீடு

ISBN

9789393361042

Reviews

There are no reviews yet.

Be the first to review “ராம்ராவ்:வாழ்வெனும் மரணம்”

Your email address will not be published. Required fields are marked *