தடாகம் வினாடி - வினா போட்டி - 4

தடாகம் வினாடி - வினா போட்டி - 4

புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் தடாகம் பதிப்பகம் நடத்திவரும் வினாடி–வினா போட்டி, வாசகர்கள் அனைவருக்கும் வாசிப்பின் மகத்துவத்தையும் தேடலின் அனுபவத்தையும் உணரும் சிறப்பு நிகழ்வாக அமைந்திருக்கிறது.


இதுவரை நடந்த மூன்று வினாடி வினா போட்டியில் பங்கேற்ற ஒவ்வொரு வாசகர்களும் சிறப்பாக பதிலளித்தனர். வெற்றிபெற்ற வாசகர்கள் புத்தகங்களை வெற்றி பரிசாக பெற்றுள்ளனர்.
இந்தாண்டு கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாளை முன்னிட்டு, ஏப்ரல் 29 முதல் மே 5 வரை "தமிழ் வார விழா"-வாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது!
இந்த சிறப்புக் கொண்டாட்டத்தில், தமிழ் மீது பற்று கொண்ட அனைவருக்கும், வாசிப்பை உயிராய் நேசிக்கும் வாசகர்களுக்கும் தடாகம் பதிப்பகம் வினாடி - வினா - 4 யை அறித்துள்ளது.


வாசிப்பும், சிந்தனையும் ஒன்றாகப் பாயும் இந்த போட்டியில், நீங்கள் வாசித்த நூல்களையும், பெற்ற அறிவாற்றலையும், புதிய பார்வையோடும் சிந்தனையோடும் போட்டியில் கலந்துகொள்ள அழகான வாய்ப்பு!
இது மாதம் இருமுறை நடைபெறும் அறிவுத் திருவிழா. இதில் தமிழில் வெளியாகியுள்ள தடாகம் பதிப்பக நூல்கள் பற்றி மட்டுமன்றி, வாசிப்பை ஊட்டும் பல்வேறு பொதுஅறிவு மற்றும் சுவாரஸ்யமான நூல் தகவல்களும் இணைக்கப்பட்டுள்ளன. உங்களை சிந்திக்க வைக்கும், நீங்கள் வாசித்ததை மீண்டும் மனதில் தோன்றச் செய்யும் கேள்விகள் இவை.


போட்டியில் பங்குபெற்று 8 மதிப்பெண்களுக்கு மேல் பெறுபவர்கள் ரூ.100 தள்ளுபடிக்கான கூப்பன் கோடு பரிசாக பெறுவர்! இந்த கூப்பன் மூலம் உங்கள் விருப்பமான தடாகம் புத்தகங்களை தேர்வு செய்து வெற்றி பரிசாக பெற்றுகொள்ளலாம்.

போட்டியில் கலந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்! 

Click Here -https://forms.gle/hfNDndJAzpY46x8w9

வாசிக்கவும்,
சிந்திக்கவும்,
வெல்லவும் தயாராகுங்கள்!


என்றும் நட்புடன்
தடாகம் பதிப்பகம்

Back to blog