Thadagam
கலங்கும் நினைவுகள்
கலங்கும் நினைவுகள்
Couldn't load pickup availability
நதாஷா அப்பானாவின் இந்த நெஞ்சை உருக்கும் கதை, ஸ்டார்லிங் பறவைகளின் கூட்டத்தின் வர்ணணையுடன் தொடங்குகிறது. அவை ஒரு இரகசிய மொழியில் கிசுகிசுப்பது, அனைத்து புலம் பெயர்வுகளின் நினைவுகளையும் எதிரொலிக்கச் செய்கிறது – குறிப்பாக, 1872இல் இந்தியாவில் உள்ள ஒரு சிறிய கிராமத்திலிருந்து மொரிஷியஸில் உள்ள போர்ட் லூயிசுக்குப் புறப்பட்ட அவரது முன்னோர்களின் புலம் பெயர்தலை நினைவூட்டுகிறது.
இந்த மனதைத் தொடும் தொடக்கத்திலிருந்து, நினைவுகளின் ஆழமான தேடல் விரிகிறது: அது ‘கூலி வர்க்கம்’ எனப்படும் கூட்டு வரலாற்றையும், நதாஷா அப்பானாவின் சொந்தக் குடும்பத்தின் அந்த கதைகளையும் வெளிச்சத்திற்குக் கொண்டுவருகிறது. இந்தப் புத்தகத்தின் மையத்தில், அவரது தாத்தாவிற்குச் செலுத்தப்பட்ட ஒரு நெகிழ்ச்சியான அஞ்சலி ஒன்று உள்ளது; அவரது வலிமையும் அமைதியான கண்ணியமும் ஒவ்வொரு பக்கத்தையும் ஒளிரச் செய்கின்றன. அவரது தந்தையைப் போலவே, அவரும் கரும்புத் தோட்டங்களில் உழைத்தார்; இந்து மரபுகளைப் போற்றிய அதே வேளையில், எல்லாவற்றிற்கும் மேலாக, ஒரு மொரிஷியன் என்ற தனது அடையாளத்தையும் ஏற்றுக்கொண்டார்.
புத்தகம் பற்றி
- ஏழுத்தாளர்:
- நதாஷா அப்பானா
Share
